அலுவலக முகாமைத்துவ போட்டியில் வெற்றிபெற்ற முந்தல் கிராம உத்தியோகத்தர்கள் கௌரவிப்பு

முந்தல் பிரதேச செயலகத்தினல் நடத்தப்பட்ட கிராம சேவகர் அலுவலக முகாமைத்துவ போட்டியில் முதல் பத்து இடங்களைப் பெற்று கொண்ட கிராம சேவகர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (21) நடைபெற்றது.

முந்தல் பிரதேச செயலாளர் விஜானி வசந்திகாவின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.அஸ்மில், கிராம நிர்வாக உத்தியோகத்தர் கே.எஸ்.எம். சிரோமி உட்பட சமுர்த்தி முகாமையாளர்கள், பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ், புத்தளம் மாவட்டம் முந்தல் பிரதேச செயலகத்தின் கீழ் கடமையாற்றி வரும் கிராம சேவகர்களுக்கிடையில் நடத்தப்பட்ட 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கானஅலுவலக முகாமைத்துவ மதிப்பீட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற முதல் 10 இடங்களைப் பெற்றவர்கள் இதன்போது நினைவுச் சின்னங்கள், சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்தப் போட்டியில் முந்தல் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வேல்சுமனபுர கிராம சேவகர் எம்.பி.ஆர்.ஆர்.லிவேரா முதலிடத்தையும், மதுரங்குளி கிராம சேவகர் திருமதி பி.ரத்னாயக்க இரண்டாம் இடத்தையும், சமீரகம கிராம சேவகர் எஸ்.ஏ.ருவன் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

இவ்வாறு முதல் பத்து இடங்களைப் பெற்ற கிராம சேவகர்கள் விருது , சின்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *