நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி அனல்மின் நிலையத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு நிலக்கரி கப்பல்களுக்கு பணம் செலுத்த முடியாமல் பல நாட்களாக நிலக்கரி இறக்கப்படாமல் புத்தளம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த இரண்டு நிலக்கரி கப்பல்கள் தரையிறங்குவதற்கு முன் 70 சதவீதத் தொகை செலுத்தவேண்டியுள்ளதாகவும், அதற்காக சுமார் 2,000 கோடி ரூபாவும் மேல் தேவைப்படுவதாகவும் குறித்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
The post இரண்டு நிலக்கரி கப்பல்களுக்கு செலுத்த பணமில்லை appeared first on Tamilwin Sri Lanka.