நாவற்குழி சிவபூமி சிவதெட்சணாமூர்த்தி திருக்கோயிலில் சிரமதானப்பணி

யாழ்ப்பாணம் – நாவற்குழியில் அமைந்துள்ள திருவாசக அரண்மனை சிவபூமி சிவதெட்சணாமூர்த்தி திருக்கோயிலில், இலங்கை முதலுதவிச்சங்கம் மற்றும் இந்து சமயத் தொண்டர் சபை உறுப்பினர்களால் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை முதலுதவி சங்க தேசிய ஆணையாளர் சிவத்திரு வை.மோகனதாஸ் தலைமையில் இடம்பெற்ற குறித்த சிரமதான பணியில் அதன் தேசிய கண்காணிப்பாளர் சிவத்திரு.வை.ஜெகதாஸ், மகளிர் பிரிவுப் பொறுப்பாளர் ச.கேதீஸ்வரி உட்பட 11 பேர் கொண்ட அணியினர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *