மின் விநியோகத்தடை தொடர்பில் மைத்திரி வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக தாம் பதவி வகித்த காலப்பகுதியில் கையொப்பமிட்ட பல வர்த்தமானி அறிவித்தல்கள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

நடப்பு அரசாங்கம் மணல் மற்றும் மண் அகழ்வுக்கான அனுமதி பத்திரத்தினை தடை செய்துள்ளமை தமக்கு வியப்பினை அளித்துள்ளது.

நான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் 65 வர்த்தமானி அறிவித்தல்களில் கையொப்பமிட்டது.

மேலும், மின் கட்டமைப்பினை புனரமைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்ட நிலையில், அதனை சிலர் விமர்சித்தது மாத்திரமின்றி நகைப்புக்குள்ளாக்கினர்.

அனைத்து வர்த்தமானி அறிவித்தல்களையும் நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்று மின் விநியோகத்தடை தொடர்பில் நாம் கவலையடையத் தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் கோர விபத்து: ஒருவர் ஸ்தலத்தில் பலி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *