கைதி உயிரிழப்பு: சிறை அதிகாரி உட்பட மூவர் பணி நீக்கம்!

எம்பிலிப்பிட்டிய – கந்துருகஸ்ஹார சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், சிறை அதிகாரி உட்பட மூவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கந்துருகஸ்ஹார சிறைச்சாலையின் சிறைக்காவலர், சார்ஜன்ட் மற்றும் சிறை அதிகாரி ஆகியோர் இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், 2010 ஆம் ஆண்டு 10 ஆயிரம் ரூபாவை திருடிய குற்றச்சாட்டில் குறித்த நபருக்கு கடந்த வருடம் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நீதிமன்றத்தினால் 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், அவர் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டு பின்னர் எம்பிலிப்பிட்டிய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இமதுவ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய குறித்த கைதி கடந்த 13 ஆம் திகதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

அத்துடன், குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், சிறை அதிகாரிகளின் கையடக்கத் தொலைபேசிகள் மூலம் தனது தந்தை வீட்டுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாக அவரது மகள் ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பான பண பரிவர்த்தனைகள் தொடர்பிலும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏகநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

வெலிகம கடலில் மாயமான மாணவிகளில் ஒருவர் சடலமாக மீட்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *