குடியரசு தினம் : டெல்லியில் உச்சக்கட்ட பாதிப்பு!

<!–

குடியரசு தினம் : டெல்லியில் உச்சக்கட்ட பாதிப்பு! – Athavan News

குடியரசு தின கொண்டாட்டங்களை முன்னிட்டு டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி 27 ஆயிரம் பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், டெல்லிக்கு வரும் அனைத்து வாகனங்களும் கடும் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பிரகதி மைதானம் அருகே ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *