ஜப்பானின் உதவியை நாடவுள்ள இலங்கை! ஜி.எல்.பீரிஸ்

சர்வதேச ரீதியில் இலங்கை எதிர்நோக்கும் சில பிரச்சினைகளை தீர்க்க ஜப்பானின் உதவியை நாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜப்பானிய தூதரகத்துடன் கூட்டாக நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையின் பார்வையை மற்ற நாடுகளுக்கு முன்வைப்பதிலும் விளக்கமளிப்பதிலும் ஜப்பான் ஏற்கனவே அதன் பங்கை ஆற்றியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஜப்பானிய கலாசாரம் காட்டும் பச்சாதாபம், இரக்கம், மென்மை மற்றும் ஒருமித்த கருத்து ஆகியவற்றின் காரணமாக ஜப்பான் அதைச் செய்யத் தகுதி பெற்றுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மின்சாரத்தை வழங்க உத்தரவாதம் தர முடியாது! – மஹிந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *