
தேறாங்கண்டல் பகுதியில் இளைஞர் ஒருவர் கிணற்றில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலையிலேயே கிணற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி தேறாங்கண்டல் பகுதியில் இளைஞர் ஒருவர் அவரது வீட்டு வளவினுள் உள்ள கிணற்றில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த கணேசன் புஸ்பராஜ் வயது 23 என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் கொலையா? தற்கொலையா என்ற கோணத்தில் மல்லாவி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.