கொரோனா எதிரொலி : மும்பை பங்குச் சந்தையில் வீழ்ச்சி!

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ள நிலையில், பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் 550 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முற்பகல் பத்து மணியளவில் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 550 புள்ளிகள் சரிந்து 58 ஆயிரத்து 487 ஆக காணப்பட்டதாகவும், தேசிய பங்குச்சந்தையின் பங்குவிலைக் குறியீடு 182 புள்ளிகள் சரிந்து 17 ஆயிரத்து 135 ஆக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலோகத் தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குவிலை ஐந்தரை விழுக்காடு வரை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *