
கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தென்னக்கும்பர தெக்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் மண்மேடு சரிந்து விழுந்ததால் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 58 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளார். குறித்த நபர் நேற்று (23) தனது வீட்டுக்கு செல்லும் பாதையை துப்புரவு செய்துகொண்டிருந்த போது, மேலே இருந்த மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.
இதனையடுத்து பிரதேசவாசிகள் நபரை மீட்கும் போதே, அவர் உயிரிழந்திருந்ததாக தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.