சமையல் அடுப்பை திருடிய இருவர் கைது!

சென்னை தண்டையார்பேட்டையில் அடுப்பு தயாரிக்கும் நிறுவனத்தில், கதவை உடைத்து சமையல் அடுப்பை திருடிய இருவரை சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து பொலிசார் கைது செய்துள்ளனர்.

சென்னை தண்டையார் பேட்டை விநாயகபுரத்தில் உள்ள குறித்த நிறுவனத்தில் நேற்று முன்தினம் இரவு கம்பெனியை மூடி விட்டு சென்றதை அடுத்து, காலையில் வந்து பார்க்கும்போது கதவின் பூட்டு திறந்து காணப்பட்டுள்ளது.

இதனைடுத்து, நிறுவன உரிமையாளர் உள்ளே சென்று பார்த்தபோது, உள்ளே இருந்த வீட்டுக்கு உபயோகப்படுத்தும் சமையல் அடுப்பு காணமல்போனதை தெரிந்து கொண்டார்.

தொடர்ந்து காசிமேடு பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் பொலிஸார் குறித்த நிறுவனத்திற்கு வெளியே உள்ள சிசிடிவி கமராவை ஆய்வு மேற்கொண்டதில், இரண்டு பேர் கோணிப்பைகளில் அடுப்புகளை வைத்து திருடி சென்ற காட்சிகளை அவதானித்துள்ளனர்.

இதனைடுத்து, உடனடியாக தண்டையார் பேட்டை பல்லவன் நகரை சேர்ந்த நபர் ஒருவரும், காசிமேடு புதுமணை குப்பத்தை சேர்ந்த மற்றொரு நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மத்திய புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *