ஆசிகுளத்தில் விவசாய செய்கையை துவம்சம் செய்த யானை!

வவுனியா ஆசிகுளம் கிராம சேவகர் பிரிவில் விவசாய செய்கையில் ஈடுபட்டிருந்த காணிக்குள் புகுந்த யானை அங்கிருந்த நெற் செய்கையை மிதித்து துவம்சம் செய்துள்ளது.

ஆசிகுளம் வயல் பகுதியில் தொடர்ச்சியாக யானையின் பாதிப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்படும் நிலையில் நேற்று இரவும் யானை ஒரு ஏக்கருக்கும் அதிகமான வயல் நிலத்தை சேதப்படுத்தியுள்ளது.

பசளை இன்மையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தற்போது யானையின் பாதிப்புக்களுக்கும் முகம் கொடுக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அப் பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *