நாடு முழுவதும் இன்று மின்வெட்டு அமுல் – முக்கிய அறிவிப்பு !

நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

நான்கு பிரிவுகளின் கீழ் இன்று மாலை 5.30 மணி முதல் இரவு 09.30 மணி வரை மின்சாரம் தடைபடும் என அச்சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்தார்.

குழு A: 17:30 மணி முதல் 18:30 மணி வரை, குழு B: 18:30 மணி முதல் 19:30 மணி வரை, குழு சி: 19:30 மணி முதல் 20:30 மணி வரை,குழு D: 20:30 மணி முதல் 21:30 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சப்புகஸ்கந்த அனல்மின் நிலையத்தின் செயற்பாடு முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு தேவையான மின் உற்பத்தி நிலையங்களை இயக்குவதற்கு எரிபொருள் பற்றாக்குறை காணப்படுவதாக மின்சார பொறியியலாளர் சங்கம் கூறியுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் இலங்கை மின்சார சபைக்கு தேவையான எரிபொருளை வழங்க முடியாதுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *