
தனுஷும், அவரின் காதல் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரிந்துவிட்டார்கள். இது குறித்து அவர்களே சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர்.
அதன்பிறகு அவரவர் வேலையில் பிசியாகிவிட்டனர். தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க இரு குடும்பத்தாரும், நண்பர்களும் முயற்சி செய்து வருகிறார்களாம்.
இந்நிலையில் தனுஷ், ஐஸ்வர்யாவின் நட்பு வட்டாரத்தை சேர்ந்தவர்கள் கூறியிருப்பதாவது, ஆறு மாத காலமாக பேச்சுவார்த்தை நடத்திய பிறகே, பிரிவது என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.
இருவருக்கும் இடையே எந்தவித கோபமோ, வெறுப்போ இல்லை. தனுஷ் தன் பிரச்சனைகள் குறித்து யாரிடமும் பேசாத ஆள். அதனால் அவர் மனதில் என்ன இருக்கிறது என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிந்தது மற்றவர்களுக்கு வேண்டுமானால் அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் இது நாங்கள் எதிர்பார்த்தது தான். பிள்ளைகள் வளரட்டும் என்று காத்திருந்தார்கள் என்றார்கள்.
ஐஸ்வர்யாவுடன் பிரச்சனை ஏற்படும்போது எல்லாம் புதுப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி வந்திருக்கிறார் தனுஷ். அப்படியாவது குடும்ப பிரச்சனையில் இருந்து தன் கவனத்தை திசை திருப்ப முயன்றிருக்கிறார்.
ஹைதராபாத்தில் ஒரே ஹோட்டலில் தங்கியிருக்கும் தனுஷ், ஐஸ்வர்யா
தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இதற்காக அவர் ஹைதராபாத்தில் தங்கியிருக்கிறார்.
காதல் பாடலை இயக்க ஐஸ்வர்யாவும் ஹைதராபாத்தில் அதுவும் தனுஷ் தங்கியிருக்கும் அதே ஹோட்டலில் தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.