தினமும் மளவுத் வாஷ் பயன்படுத்தலாமா? என்னென்ன பக்க விளைவுகள் உண்டாகும்?

தினமும் குளித்துவிட்டு உடலைச் சுத்தமாக எப்படி சுத்தமாக வைத்துக் கொள்கிறோமோ அதேபோல நம்முடைய வாயையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்குத்தான் தினமும் பல் துலக்குகிறோமோ என்று நீங்கள் கேட்கலாம். அதுமட்டும் போதாது.

தினமும் காலையில் பல் துலக்கிவிட்டால் மட்டும் வாய் ஆரோக்கியமாகிவிடுமா? பல் துலக்கியதும் நாக்கை சுத்தம் செய்வது, ஒவ்வொரு முறை சாப்பிட்டதும் வாய் கொப்பளிப்பது, ஆயில் புல்லிங் செய்வது அப்படி பல சுகாதார வழிமுறைகள் இருக்கின்றன.

இவையெல்லாம் காலங்காலமாக பின்பற்றும் நடைமுறைகள் தான். ஆனால் அதற்கு நாம் பயன்படுத்தும் பொருள்களில் தான் சிக்கல்கள் உண்டாகின்றன.

​மளவுத் வாஷ் பயன்படுத்துதல்

வாய் கொப்பளிக்க பொதுவாக நாம் கடைகளில் விற்கும் மளவுத் வாஷ்களைப் பயன்படுத்துகிறோம். சிலர் காலையிலோ அல்லது இரவிலோ மட்டும் இதைப் பயன்படுத்துவார்கள்.

ஆனால் சிலரோ கூடுதல் கவனத்துடன் இருப்பதாக நினைத்து ஒவ்வொரு முறை வாய் கொப்பளிக்கும்போது மளவுத் வாஷ் பயன்படுத்துவார்கள். மளவுத் வாஷில் வாயை சுத்தம் செய்து கிருமிகளை அழிக்கும் தன்மை இருக்கிறது தான்.

ஆனால் அதிலும் சில ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அதனால் அவற்றை அதிகமாகப் பயன்படுத்தும்போது சில பக்க விளைவுகள் உண்டாகின்றன. அப்படி அதிகமாக மளவுத் வாஷ் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பயன்கள்

மளவுத் வாஷ் பயன்படுத்துவதால் வாயில் துர்நாற்றம் இல்லாமல் நல்ல நறுமணத்துடன் இருக்கும்.

வாயில் உற்பத்தியாகும் பாக்டீரியாக்களை அழிப்பதோடு, அதனால் உண்டாகும் வாய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க உதவுகிறது.

​வாய்ப்புண்

மளவுத் வாஷில் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் கொண்ட சில ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அதோடு ஆல்கஹாலும் இருக்கிறது.

அதனால் இதை தினமும் பயன்படுத்தும்போது வாய்ப் பகுதியில் உள்ள மென்மையான திசுக்களையும் சேதப்படுத்துவதால் வாயில் அழற்சி மற்றும் புண்கள் உண்டாகின்றன.

​பற்கள் சேதமடையும்

பொதுவாக நிறைய பேர் செய்யும் தவறு இதுதான். குழந்தைகள் பிரஷ் செய்ய அடம்பிடிப்பார்கள் என்பதால் மளவுத் வாஷ் பயன்படுத்தி அவர்களை வாய் கொப்பளிக்கச் செய்வது.

ஆனால் குழந்தகளின் வாய் மற்றும் பற்கள் மிகவும் மென்மையானவை. மளவுத் வாஷில் சேர்க்கப்படும் ஆல்கஹால் குழந்தைகளின் பற்களையும் சேதப்படுத்திவிடும்.

​வாய் வறட்சி

மளவுத் வாஷைப் பயன்படுத்தி ஒரு நாளைக்கு ஒரு முறை வாய் கொப்பளிக்கலாம். ஆனால் அளவுக்கு அதிகமாக மளவுத் வாஷ் பயன்படுத்துவதால் வாய் அதிக அளவில் வறட்சி அடையும்.

அதுவே நல்ல பாக்டீரிக்களை அழித்து கெட்ட பாக்டீரியாக்கள் உருவாகக் காரணமாகிவிடும்.

​விழுங்கிவிட்டால்

மளவுத் வாஷைப் பயன்படுத்தி வாயைக் கொப்பளிக்கும்போது அது வாயின் உட்பகுதிக்குள்ளும் செல்லும். அல்லது தெரியாமல் மளவுத் வாஷை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிவிடுகிறோம்.

அப்படி விழுங்குவதனால் அதிலுள்ள ஆல்கஹால் மற்றும் பிற ரசாயனங்கள் சேர்ந்து உடலில் பல சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.

குறிப்பாக, சீரற்ற இதயத் துடிப்பு, தலை சுற்றல், தலைவலி மற்றும் வயிற்றுக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *