தண்ணீரூற்று பொதுச்சந்தை காவலாளி மீது தாக்குதல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு சொந்தமான தண்ணீரூற்று பொதுச்சந்தை இன்று நள்ளிரவு ஒரு மணியளவில் சில விசமிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு, சேதமாக்கப்பட்டுள்ளதோடு சந்தையின் காவலாளியும் தாக்குதலுக்குள்ளாகி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளார்.

மதுபோதையில் சந்தையின் நுழைவாயிலை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற கும்பல் பொது சந்தையின் கட்டடங்கள் தளபாடங்களை உடைத்து சேதமாக்கியுள்ளது.

மூன்று பேர் கொண்ட கும்பல் இணைந்து இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளமை பொதுச்சந்தை சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாலசுந்தரம் கொலை: வியாழேந்திரனின் தொலைபேசி அழைப்பு தொடர்பில் விசாரிக்க பணிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *