இலங்கையில் தொடர் மின்வெட்டு! குப்பி விளக்குடன் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி!

மின்சார துண்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, குப்பி விளக்கு ஒன்றை எடுத்து வந்து கொழும்பில் இன்று செய்தியாளர் சந்திப்பை நடத்தியுள்ளார்.

எரிபொருள் இல்லாத காரணத்தினால், அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால், மக்கள் கஷ்டங்களுக்கு உள்ளாகி உள்ளமைக்கு எதிர்ப்பை காட்டும் விதமாக அத்தநாயக்க இவ்வாறு குப்பி விளக்கை எடுத்து வந்துள்ளார்.

கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இந்த செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.

மக்களின் இயல்பு வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லும் அதே நேரத்திலேயே மின்சார நெருக்கடிக்கு தீர்வை தேட வேண்டும்.

மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்து மின்சார நெருக்கடிக்கு தீர்வை தேடுவது வெற்றியை கொடுக்காது.

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியை தீர்ப்பதற்கு அரசாங்கத்திடம் கூட்டு முயற்சிகள் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இயற்கை விவசாயத்தால் விவசாயிகளுக்கு சிரமம்! ஒப்புக்கொண்டார் மஹிந்தானந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *