அரசுடன் டீல் பேசும் சஜித் அணி – ஆதரவு கொடுக்கவும் தயார்?

நாட்டின் அபிவிருத்திக்கு ஒத்துழையுங்கள் என கூறும் கோட்டா அரசு நாம் கூறும் பொறிமுறைக்கு ஏன் தலை சாய்கிறார்கள் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

நாட்டில் எந்த ஒரு பிரச்சினைக்கும் முன் மாதிரியாக இருப்பது கொரோனாத் தொற்று. எதை கேட்டாலும் கொரோனா கொரோனா என்று கூறுகின்றோம்.

இந்நிலையில், நாட்டை கட்டி எழுப்புவதற்கு, ஜனாதிபதி மற்றும் அரச சார்பான கட்சி அனைத்தும் எதிர்க்கட்சியும் பங்களிப்பு செய்ய வேண்டும் என கூறுகிறது.

இவ்வாறு ஆதரவு கூறுபவர்கள், அன்று கொரோனா தொடர்பான ஆரம்ப தடுப்பு நடவடிக்கைகளை தன்னிச்சையாக எடுப்பதற்கு முன்னரே, எம்மிடம் ஆலோசனைகளை பெற்றிருக்க வேண்டும்.

அல்லது கொரோனா முகாமைத்துவக் குழுவை அமைத்து அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்க வேண்டும்.

ஆனால், அன்று அரசாங்கம் ஒன்றும் கூறாமல் அகங்காரத்துடன் இருந்தது. இன்று ஆதரவு கோரினால் என்ன நியாயம்.

சரி, தற்போது ஒரு வருடம் தாமதமாகினாலும் பரவாயில்லை. மீண்டும் இவ்வாறான மக்கள் சார்பான பிரச்சினைகளுக்கு குழு ஒன்றை அமையுங்கள் ,எம்மையும் உள்வாங்குகள், மக்களுக்காக நாம் என்ற அடிப்படையில் நாட்டை கட்டியெழுப்புவதற்கு உதவி செய்வோம். – என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஆண்டிலாவது கோட்டாவுக்கு நல்ல புத்தி வர வேண்டும்! – ராஜித

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *