
நிகழாண்டின் முதல் 20 தினங்களில் 53,791 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் “தினம்தோறும் சுமார் 3,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருகிறார்கள். நிகழாண்டின் முதல் 20 தினங்களில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த சுமார் 10,000 பேர் வந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.