
சிங்கராஜ மழைக்காடு எல்லையில் அமைந்துள்ள தொம்பகொட மற்றும் லங்காகம கிராமங்களை இணைக்கும் ஜிங்கா ஆற்றின் பிரதான கிளையாற்றின் குறுக்கே நிர்மாணிக்கப்பட்ட மெதெரிபிட்டிய பாலம் இன்று பிற்பகல் உடைந்து வீழ்ந்துள்ளது.
1980 ஆம் ஆண்டு தெற்கு அபிவிருத்தி அதிகார சபையின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட இப்பாலமானது தெனியாயவிலிருந்து மெதிரிபிட்டிய ஊடாக நெலுவாவிற்கு பயணிப்பதற்கு வசதியாக அமைந்துள்ளது.
இந்த பாலம் கடந்த 2003-ம் ஆண்டு இலகுரக வாகனங்கள் மட்டும் செல்லும் வகையில் அகலப்படுத்தப்பட்டு, கூடிய போக்குவரத்துக்கு வழிவகுத்தது.
ஆனால், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பாலத்தின் நிலையை ஆய்வு செய்த வீதி அபிவிருத்தி பொறியாளர்கள் பாலத்தை மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள்களுக்கு மட்டுமே பயன்படுத்த தடை விதித்தனர்.
அதன்படி, பாலத்தில் கனரக வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தனர்.
எனினும் பின்னர் கிராம மக்கள் தடுப்புகளை அகற்றி, கனரக வாகனங்கள் செல்ல வீதியை திறந்து விட்டதாக கூறப்படுகிறது.
இன்று பாலத்தின் மீது ஹன்ரர் ஒன்று சென்று கொண்டிருந்த போது பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.
இந்த விபத்தால், ஹன்ரர் பாலத்தின் கீழ் பகுதியில் சிக்கியதுடன் சாரதி, அதில் இருந்த யாருக்கும் காயமின்றி தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
