முள்ளியவளை தண்ணீர் ஊற்று சந்தை மீது தாக்குதல்: மூவர் கைது

முல்லைத்தீவு, ஜனவரி 25: முள்ளியவளை தண்ணீர் ஊற்று சந்தை மீது தாக்குதல் நடத்திய மூன்று பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

இது தொடர்பாக காவல்துறை வட்டாரங்கள் கூறியது: முள்ளியவளை தண்ணீர் ஊற்று பொதுச் சந்தையை குத்தகைக்கு எடுத்தது தொடர்பாக எழுந்த பிரச்சினையில் நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று சந்தை மீது திங்கள்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் இரண்டு கடைகளின் கதவுகள் சேதமடைந்துள்ளன. தாக்குதலில் காயமடைந்த சந்தையின் காவலாளி முல்லைத்தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் தொடர்பாக சந்தை வளாகத்தில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கமராக்களின் பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. இதன் போது தாக்குதல் நடத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *