மற்றொரு கொரோனா அலையைத் தவிர்க்க பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு வைத்தியர்கள் கோரிக்கை!

இலங்கையில் மற்றொரு கொரோனா அலையைத் தவிர்க்க பொதுமக்கள் பூஸ்டர் தடுப்பூசியை விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையின் பிசியோதெரபிஸ்ட் பேராசிரியர் ஷர்மிளா டி சில்வா, இதுவரை மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழியவில்லை என்றாலும் ஒவ்வொரு நாளும் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

OMICRON மாறுபாடு நாட்டில் வேகமாக பரவும் மாறுபாடாக மாறுகிறது என்ற அறிக்கைகளுக்கு மத்தியில் கொரொனா நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அலர்ஜி, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவு, இந்த மாறுபாட்டின் இரண்டு துணைப் பரம்பரைகள் வேகமாக பரவி வருவதாகவும் கூறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸைப் பெற்ற பலர் மூன்றாவது டோஸைப் பெறுவதற்கு அதே அளவு ஆர்வத்தைக் காட்டுவதில்லை என்பதை சுட்டிக்காட்டிய பேராசிரியர் டி சில்வா, தடுப்பூசி தொடர்பான பல கட்டுக்கதைகள் சமூகத்தில் வேரூன்றியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மலட்டுத்தன்மை மற்றும் ஆண்மைக்குறைவு தடுப்பூசியின் பக்கவிளைவாக இருக்கும் போன்ற கட்டுக்கதைகளை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக் கொண்ட அவர், நாட்டில் மற்றொரு கொரோனா அலையைத் தடுக்க ஒவ்வொரு நபரும் பூஸ்டர் டோஸைப் பெற வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *