கொரோனாவால் 14 பேர் உயிரிழப்பு

கொழும்பு, ஜனவரி 25: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 14 பேர் உயிரிந்துள்ளனர். அதேநேரம் கடந்த 24 மணி நேரத்தில் 877 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம், நாட்டில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6,02, 763 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 5,76,324 பேர் கொரோனா பாதிப்பில் இருந்துஏற்கனவே குணமாகியுள்ள நிலையில், தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 11,126 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 6 ஆண்கள், 8 பெண்கள் என 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,313 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *