இலங்கையில் கோவிட் தொற்றிற்கு மேலதிகமாக பரவும் மற்றுமொரு வைரஸ்

இலங்கையில் கோவிட் வைரஸ் தொற்றிற்கு மேலதிகமாக, மற்றுமொரு வைரஸ் பரவி வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டுமென அதன் உறுப்பினர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிபுணர் குழுவின் ஆய்வைத் தொடர்ந்து, புதிய வகைகளை ஒமிக்ரோன் மற்றும் கோவிட்டின் புதிய மாறுபாடுகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஐந்து பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

இது தொடர்பான பரிந்துரைகள் அடுத்த சில நாட்களுக்குள் அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் குழு உறுப்பினர் மருத்துவர் செனல் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *