பயிர் சேதங்களுக்கு ரூ.40,000 மில்லியன் இழப்பீடு: மஹிந்தானந்த அளுத்கமகே

கொழும்பு, ஜனவரி 25: கடந்த பருவத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு ரூ. 40,000 மில்லியன் இழப்பீடு வழங்கப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு செவ்வாய்கிழமை நடந்தது. இதில் மஹிந்தானந்த அளுத்கமகே பேசியது:

கடந்த பருவத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் ரூ. 40,000 மில்லியனை ஒதுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதன் மூலம் விவசாயிகள் பயன் பெறுவார்கள்.

மேலும், நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை ஊடாக செவ்வாய்க்கிழமை முதல் 1 கிலோ நெல் தலா ரூ.75 க்கு விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *