நாட்டில் மற்றுமொரு புதிய வைரஸ் பரவலா?

கொரோனா வைரஸ் பரவலுக்கு மேலதிகமாக நாட்டில் மற்றுமொரு புதிய வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலை தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமென அந்தச் சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரான் மற்றும் புதிய கொரோனா திரிபிலிருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் 05 ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிபுணர் குழுவினூடன முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளை அடுத்தே இந்த ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆலாசனைகளை எதிர்வரும் சில தினங்களில் அரச அதிகாரிகளுக்கு வழங்க எதிர்பார்த்துள்ளதாக அந்த சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் செனால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *