
இலங்கை பொலிஸாருக்கு பயிற்சியளிக்கும் ஒப்பந்தத்திலிருந்து ஸ்கொட்லாந்து விலகியுள்ள நிலையில், பிரித்தானியா தொடர்ந்தும் பயிற்சியளிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் பாதுகாப்பு தரப்பினை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
இலங்கையின் மின் சித்திரவதை, பாலியல் சித்திரவதைகள், மற்றும் ஏனைய மனிதாபிமானமற்ற சித்திரவதைகள் இடம்பெறுவதாக ஸ்கொட்லாந்திற்கு புலம்பெயர்ந்தவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதை தொடர்ந்து ஸ்கொட்லாந்து தமது பயிற்சி திட்டத்தினை இடைநிறுத்திக்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரித்தானிய அரசாங்கம் இலங்கை பொலிஸாருக்கு தொடர்ந்தும் பயிற்சிகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளமையை பல நாடுகள் கண்டித்துள்ளன.
இருப்பினும், இலங்கையின் மனித உரிமைகள் விடயத்தில் தாம் தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருதாக பிரித்தானியா தெரிவித்துள்ளதாகவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.