
யால தேசிய பூங்காவில் யானை ஒன்று தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, அமைச்சர் சீ.பி. ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.
யால தேசிய பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற சபாரி வாகனங்களின் சாரதிகளால் குறித்த யானை தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பான காணொளி ஒன்றும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வாகனங்கள் பயணித்தவர், வழியில் குறுக்கிட்ட யானையை, வெடியொன்றை வெடிக்கச் செய்து காட்டுக்குள் அனுப்பும் காட்சி பதிவாகியுள்ளது.
இவ்வாறு யானைகள் குறுக்கிடும் பட்சத்தில் அவை பாதையைக் கடப்பதற்கு இடமளிக்கப்பட வேண்டும் என்ற நியதி உள்ளது. இதனை மீறிச் செயற்பட்டமை தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
Who has right of way? Chasing elephants away, with thunder flashes, inside National Parks! What type of conservation is this? What type of park management is this? #yala #SriLanka pic.twitter.com/M5sPrOEA2e
— WNPSSL (@wnpssl) January 24, 2022
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.