முல்லைத்தீவு – கருநாட்டுக்கேணி பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் காயமடைந்த நிலையில் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி பகுதியில் வயலுக்கு செல்லும்போது கட்டுத்துவக்கு வெடித்துள்ளது.
இதன்போது 48 அகவையுடைய குடும்பஸ்தர் ஒருவர் காலில் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்வம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொக்குளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.