
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார் வீதியில் ஓட்டோ சாரதியொருவர், இன்று (25) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், ஓட்டோவும் சேதமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர், கறுவப்பங்கேணி, நாவலர் வீதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய மாசிலாமணி தர்மரெட்னம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கறுவப்பங்கேணியிலிருந்து மட்டக்களப்பு ரயில் நிலையத்துக்கு பயணிகளை ஏற்றுவதற்கு சென்ற நிலையிலேயே அவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொதுமக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.