
திருகோணமலை – ஈச்சிலம்பற்று கல்வி கோட்டத்திற்குட்பட்ட இலங்கைத்துறை முகத்துவாரம் இந்துக்கல்லூரியில் கல்வி கற்கும் வறுமையான 40 மாணவர்கள்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை (25) இடம்பெற்றது.
திருகோணமலை ரோட்டரிக் கழகம் இவ் துவிச்சக்கர வண்டிகளை வழங்கியிருந்தது.
இலங்கைத்துறை முகத்துவாரம் இந்துக் கல்லூரியில் சுமார் 25 கிராமங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இவர்களில் அதிகமான மாணவர்கள் தூரப் பகுதிகளாலிருந்து கால்நடையாக தினந்தோரும் பாடசாலைக்கு வருகை தருகின்றனர்.
இந்நிலையில் இம்மாணவர்களின் போக்குவரத்துக்கு நலனில் அக்கரை கொண்டு திருகோணமலை ரோட்டரிக் கழகம் இவ் துவிச்சக்கர வண்டிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் திருகோணமலை ரோட்டரிக் கழகத் தலைவர் .த.அகிலன், கழக ஆலோசகர் திருமுகம், திட்ட இணைப்பாளர் ச.சிவசங்கர், பொதுமக்கள் தொடர்பாடல் பொறுப்பாள. வைத்தியர் குணாலன், எதிர்காலத் தலைவர் என்.கிட்னதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .

