
அகம் மனிதாபிமான வள நிலையத்தின் நிதி மற்றும் நெறிப்படுத்தலுடனும் எழுத்தாணி கலைப் பேரவையின் ஆதரவுடனும் இடம்பெற்ற 06 மாத கால வெகுஜன ஊடாக டிப்ளோமா கற்றை நெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று(25) திருகோணமலை குளக்கோட்டம் மண்டபத்தில் அகம் மனிதாபிமான வள நிலையத்தின் இணைப்பாளர் கண்டுமணி லவகுசரசா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிகளாக திருமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பொ.தனேஸ்வரன், திருமலை வலயக் கல்வி அலுவலகத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன் கலந்து கொண்டதுடன், சிறப்ப விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான மயூரி ஜனன் மற்றும் திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான பிரசாந்தினி உதயகுமாரும் கலந்து கொண்டனர்.
அத்துடன் எ இணைந்து செயற்பட்ட திருமலை எழுத்தாணி கலைப்பேரவையின் தலைவர் திரு.வ.ராஜ்குமார் மற்றும் வொயிஸ் ஒப் மீடியா வலையமைப்பின் நிருவாக முகாமையாளர் திரு.ஏ.அருள்சஞ்சித் அவர்களும் திருமலை கூட்டுறவு சங்கத்தின் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான திரு. எஸ்.நவரெத்தினம் மற்றும் அகம் மனிதாபிமான வள நிலையத்தின் பிரதி இணைப்பாளர் அ.மதன், பெண்கள் திட்ட முகாமையாளர் ந.அஞ்சலிதேவியும் கலந்து கொண்டதுடன் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் 06 மாத கால வெகுஜன ஊடாக டிப்ளோமா கற்றை நெறியினை நிறைவு செய்த மாணவர்களால் பல நிகழ்வுகளும் அனுபவப் பகிர்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .


