
கொழும்பு, ஜனவரி 25: நாட்டில் மின்சார நெருக்கடி நிலவிவரும் நிலையில், மக்கள் தம்மால் முடிந்தளவு மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (பி.யூ.சி.எஸ்.எல்.) தலைவர் ஜனக ரத்நாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் “மின் உற்பத்தி நிலையங்களில் ஆய்வு நடத்திய பிறகு நாட்டில் மின் வெட்டு அமல்படுத்துவது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும். நாட்டில் மின்சார நெருக்கடி நிலவிவரும் நிலையில், மக்கள் மக்கள் தம்மால் முடிந்தளவு மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். தேவையில்லாத குளிரூட்டிகள், மின் விசிறிகள், குளிர்சாதனப் பெட்டிகள் ஆகியவற்றை நிறுத்தி மின் சேமிப்பில் நாட்டு மக்கள் பங்கேற்க வேண்டும்.
மின் உற்பத்தி நிலையங்கள் கடந்த பல ஆன்டுகளாக நிறுவப்படவில்லை. நாடு எதிர்கொள்ளும் மின் நெருக்கடிக்கு அதுவும் ஒரு காரணமாகும் என்று அவர் தெரிவித்தார்.