
இலங்கை பக்தர்கள் மட்டுமே இம்முறை கச்ச தீவு புனித அந்தோனியார் பெருநாளில் கலந்து கொள்ள முடியும்
இந்திய பக்தர்களின் வருகை இன்றி இம்முறை கச்ச தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் நடைபெறும் என யாழ்ப்பாண மாவட்டச் செயலர் க.மகேசன் சமூகம் மீடியாவுக்கு தெரிவித்தார்.
மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்ற கச்ச தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான கலந்துரையாடல் தொடர்பில் அவரிடம் சமூகம் மீடியா வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் 11,12 ஆம் திகதிகளில் திருவிழா நடைபெறும்.இதில் 500 பக்தர்கள் மட்டுமே இம்முறை கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படும்.கொரோனா பாதுகாப்பு நிலைமை கருதி இம்முறை இந்திய பக்தர்கள் அனுமதிக்க பட மாட்டார்கள் என்றார்.