இரசாயன உரங்கள் விரைவில் இறக்குமதி!

யூரியா உள்ளிட்ட இரசாயன உரங்கள் அடுத்த சில வாரங்களில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் என்று தேசிய உரச் செயலகத்தின் பிரதிப் பணிப்பாளர் கசுன் மஹதன்தில தெரிவித்துள்ளார்.

இரசாயன உரங்கள் இறக்குமதித் தடை நீக்கப்பட்டதன் பின்னர், கடந்த சில தினங்களில் ஆயிரத்து 500 மெற்றின் தொன் யூரியா உரம் இறக்குமதி செய்யப்பட்டது. எஞ்சிய இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு தற்போது அனுமதி கிடைத்துள்ளது.

குறித்த இரசாயன உரங்கள், கப்பல் மூலம் சில வாரங்களில் நாட்டுக்குக் கொண்டு வரப்படும். எனினும் டொலர் மற்றும் கடன் சான்றுப் பத்திரங்களை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக, இரசாயன உரங்களை நாட்டுக்கு இறக்குமதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *