மருதமுனை ஹெப்பி கிட்ஸ் பாலர் பாடசாலையின் கலை விழா

மருதமுனை ஹெப்பி கிட்ஸ் பாலர் பாடசாலையின் கலை கலாச்சார விழா பாடசாலையை அதிபரும், இளைஞர் சேவை அதிகாரியுமான எம்.டி.எம். ஹாரூன் தலைமையில், மருதமுனை கலாச்சார மண்டபத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

நிகழ்வின் பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாசில் கலந்து கொண்டார்.

அத்துடன் கௌரவ அதிதிகளாக கல்முனை பிரதேச செயலாளர் ஜெ.லியாக்கத் அலி, மட்டக்களப்பு மத்திய வலயத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம். முதர்ரீஸ், புலவர் மணி ஷரிபுத்தீன் வித்தியாலயத்தின் அதிபர் எம்.எம்.நியாஸ், கல்முனை மாநகர சபை உறுப்பினர் பி.எம். சிபான் மற்றும் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் யூ.எல்எம். ஜெஸ்மீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் முதலாம் தரத்துக்கு கல்வி கற்க செல்லும் சுமார் 70 மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.

இதன் போது பேராசிரியர் உரையாற்றுகையில்:

அண்மைக் காலமாக எமது வலையத்தில் கல்வியில் பல சவால்களை எழுந்து கொண்டு வருவதை சுட்டிக்காட்டி இன்று பாலர் பாடசாலையை விட்டு விலகி முதலாம் தரத்துக்கு செல்லும் மாணவ செல்வங்களுக்கு அவர்களின் எதிர்கால கல்வியில் பல முன்னேற்றங்களை கண்டுஇந்த பிரதேசத்தில் மட்டுமல்லாமல் இந்த முழு நாட்டிற்கும் சிறந்த ஒரு பிரைஜயாக மிளிர வேண்டும்.- என்று வாழ்த்து கூறியுள்ளார்.

சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி மரணம்! – யாழில் சோகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *