முன்னதாக திட்டமிட்டபடி நாளை (15) தபால் மூல வாக்குப்பதிவுக்கான வாக்குச்சீட்டுகளை விநியோகிக்க முடியாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற அரசியல் கட்சிச் செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் கண்காணிப்பாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே இதனை தெரிவித்துள்ளது.
உரிய கொடுப்பனவுகள் செலுத்தப்படும் வரை தபால் மூல வாக்குச் சீட்டுகளை அச்சடிக்க அரச அச்சம் மறுத்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.