எலிக் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுகாதார பிரிவு எச்சரிக்கை

கொழும்பு, ஜனவரி 25:

நாட்டில் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது. மேலும், எலிக் காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக அப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு காலி மாவட்டத்தில் மட்டும் 476 பேர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அந்த மாவட்டத்தில் 6 பேர் எலிக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக காலி மாவட்ட சமூக நல வைத்திய நிபுணர் அமில ஏரங்க சந்திரசிறி கூறுகையில் “நோயின் தாக்கம் தொடர்பாக மக்கள் கவலையீனமாக உள்ளனர். நோய்த் தாக்கத்திற்கு உள்ளானவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவதில்லை. இதனால், எலிக் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.

முன்பு வயல் பகுதிகளை அண்டிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மட்டுமே எலிக் காய்ச்சல் ஏற்றப்பட்டது. ஆனால், தற்போது, வயல் பகுதிகளை அண்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் மட்டுமின்றி, நகர் பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் எலிக் காய்ச்சல் ஏற்படுகிறது.

மக்கள் இது தொடர்பாக விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *