
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக IDH வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஹசித அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள IDH வைத்தியசாலையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட முதலாவது சீனப் பெண் அனுமதிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில், இன்று மீண்டும் ஐனுர் வைத்தியசாலையின் கொள்ளளவு அதன் கொள்ளளவைத் தாண்டியுள்ளது.
தற்போது ஒக்சிஜன் தேவைப்படும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
பிசிஆர் சோதனைகளில் 50 சதவீதமானோருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.