இலங்கையில் 87 ஆண்கள், 73 பெண்கள் கொரோனாவுக்கு பலி

நாட்டில் நேற்று முன்தினம் (13) மேலும் 160 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி இதுவரை மொத்தமாக 5,935 பேர் நாட்டில் கொவிட் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

87 ஆண்களும் 73 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 வயதிற்கு கீழ் ஒரு ஆணும் 30 முதல் 59 வயதிற்கிடைப்பட்டோரில் 22 ஆண்களும் 13 பெண்களுமாக 35 பேரும், 60 வயதும் அதற்கு மேற்பட்டோரில் 64 ஆண்களும் 60 பெண்களுமாக 124 பேர் இவ்வாறு கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *