மின்சார சபைக்கு பதில் பொது முகாமையாளர் நியமிப்பு!

இலங்கை மின்சார சபையின் புதிய பொது முகாமையாளராக கலாநிதி ரோஹந்த அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினால் பல வாரங்களாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் காரணமாக, இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் சுசந்த பெரேரா, பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், மின்சார சபையின் உதவிப் பொது முகாமையாளராக கடமையாற்றிவந்த, சிரேஷ்ட மின் பொறியியலாளர் கலாநிதி ரோஹந்த அபேசேகர தற்போது இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *