
கொரோனாத் தொற்றுநோய் காரணமாக பாடசாலைகளை மீண்டும் மீண்டும் திறந்து மூட முடியாது. ஏனெனில் மாணவர்களே இறுதியில் பாதிக்கப்படுவதாக நுரையீரல் நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை குறுகிய காலத்திற்குள் இரட்டிப்பாகியுள்ளது, இந்நிலையில் பாடசாலைகளை மீளவும் மூடுமாறு மக்கள் கேட்கின்றனர்.
மக்களுக்குப் புரியாத விஷயம் என்னவென்றால், வைரஸ் பரவுவது பாடசாலைக்கு அருகாமையில் இல்லை, பெரியவர்கள்தான் சுகாதார விதிமுறைகள் தளர்த்தப்பட்டதன் மூலம், மக்கள் மூடிய இடங்களில் பார்ட்டிகள், திருமணங்கள் மற்றும் கூட்டங்களை நடத்துகிறார்கள்.
அத்துடன், எந்த பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றுவதில்லை. முகமூடி கூட அணியாதவர்களையும் பார்க்கிறோம். இதுவே கொரோனா எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரிப்பதற்குக் காரணமாகும்.
பெரியவர்களிடையே கொரோனாத் தொற்று பரவுவதை விட குழந்தைகளிடையே பரவும் விகிதம் மிகக் குறைவு என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
பெரியவர்களிடமிருந்து பெரியவர்களுக்கு பரவும் விகிதத்துடன் ஒப்பிடுகையில் குழந்தைகளிடமிருந்து குழந்தைகளுக்கு பரவும் விகிதம் குறைவாக உள்ளது.
உலக சுகாதார அமைப்பு மற்றும் ருNஐஊநுகு ஆகியவையும் கொரோனா வைரஸை பரப்புவது பாடசாலை சூழல் அல்ல என்பதை நிரூபிக்கும் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு குழந்தைகள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, அவர்களில் யாரும் ஆபத்தான நிலையில் இல்லை.
கொரோனா வைரஸ் சமூகத்தில் இருந்து அகற்றப்பட முடியாத ஒன்று, ஆனால் மக்கள் தகவமைத்து முன்னேறக் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு முறையும் தொற்று அதிகரிக்கும்போது, நாட்டைப் பூட்ட முடியாது. பூட்டுதலுக்கு மக்கள் கோரிக்கை வைப்பது எளிதானது.
இந்நிலையில், 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட வேண்டும், குறிப்பாக அடிப்படை சுகாதார நிலைமைகள் உள்ளவர்கள்.
முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாகக் கருதப்பட, 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் டோஸையும் பெற வேண்டும்.
வைரஸ்கள் மாற்றமடைகின்றன, மேலும் இந்த தொற்றுநோயை முறியடிப்பதற்கான ஒரே வழி தடுப்பூசிகள் மட்டுமே என்று அவர் தெரிவித்துள்ளார்.