இலங்கையில் கொரோனா தடுப்பூசியின் திட்டத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு பிரதமர் தலைமையில் சிறப்பு நிகழ்ச்சி

கொழும்பு, ஜனவரி 25:

இலங்கையில் கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட ஓராண்டு நிறைவை முன்னிட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

கொரோனா தொற்றுக்கு பிரதான தீர்வாக தடுப்பூசி திட்டம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் திகதி தொடங்கியது. இந்நிலையில், இம் மாதம் 29 ஆம் திகதியுடன் தடுப்பூசி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒருவருடம் நிறைவடைகிறது.

இதை முன்னிட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக இலங்கை சுகாதாரத் துறை மூத்த அதிகாரி கூறியது:

தடுப்பூசித் திட்டத்தின் ஓராண்டு நிறைவை ஒட்டி, நாட்டில் உள்ள மருத்துவமனைகள், பிராந்திய மருத்துவ அதிகாரிகள் அலுவலகங்களில் சிறப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி , பூஸ்டர் தடுப்பூசி திட்டம் மருத்துவமனைகள், மருத்துவ அதிகாரிகள் அலுவலகங்களில் சிறப்புத் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும்.

மேலும், நாடு முழுவதும் உள்ள தகுதியுடைய மக்களுக்கு தடுப்பூசியின் மூன்று டோஸ்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பிரதான நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் சுகாதார அமைச்சின் சுவாசிரிபாய வளாகத்தில் எதிர்வரும் 29 ஆம் திகதி காலை நடைபெறவுள்ளமை என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *