நியூசிலாந்தில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; அலறியடித்து ஓடிய மக்கள்! இலங்கைக்கு ஆபத்தா? SamugamMedia

நியூசிலாந்து நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நியூசிலாந்தின் வெலிங்டன் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ளூர் நேரப்படி இரவு 7.38 மணியளவில் ரிக்டர் அளவில் 6.1ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால், வீடுகளைவிட்டு வெளியேறி மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

கடந்த வாரம் துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 40,000 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில், நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை

நியூஸிலாந்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது என இலங்கை இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

இடர் முகாமைத்துவ நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *