தேர்தல் நடத்தும் திகதியில் மாற்றம்? வெளியான அறிவிப்பு! SamugamMedia

தபால் மூல வாக்குகள் விநியோகிக்கும் திகதி மாறினாலும் தேர்தலை நடத்தும் திகதியில் மாற்றம் ஏற்படாது என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

சுதந்திர மக்கள் முன்னணியின் செய்தியாளர் சந்திப்பில் இன்று (15) கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொய்யான காரணங்களைக் காட்டி தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் முயற்சியை முறியடித்து மக்களின் இறையாண்மையை பாதுகாக்கவேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்க முயற்சிப்பது பணப்பற்றாக்குறையால் அல்ல என்றும், அரசாங்கத்திடம் வாக்குகள் இல்லை என்பதாலேயே என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *