7மாவட்டங்களுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுகள் தயார் நிலையில்!SamugamMedia

ஏழு மாவட்டங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுகள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.

நிதி விவகாரம் தொடர்பில் திறைசேரியுடன் கலந்துரையாடி தீர்வு காண்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் தமக்கு அறிவித்துள்ளதாக அவர் கூறினார்.
அரசாங்க அச்சகத் திணைக்களத்திற்கு இதுவரை 400 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
எனினும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அச்சுப் பணிகளுக்கு 700 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *