அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிதி ஒதுக்கீடு: வலி கிழக்கில் உதவித் திட்டங்கள்

யாழ்ப்பாணம், ஜனவரி 26:

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் 2021 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி கிழக்கு நிர்வாகப் பொறுப்பாளர் இராமநாதன் ஐங்கரன் உபகரணங்களை வழங்கினார்.

மேலும் வலி கிழக்கு பகுதியில் உள்ள பொது அமைப்புகளுக்கு தளபாடங்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வு, வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் மதியழகன் சுபாசினி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், வலி கிழக்கு திட்டமிடல் பணிப்பாளர் கிருஷ்னாளினி , தலைமையக சமுர்த்தி முகாமையாளர் நகுலராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *