யாழில் கார் விபத்து: தெய்வாதீனமாக உயிர் தப்பிய வைத்தியர்கள்!

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட விபத்தொன்றில் வைத்தியர்கள் சிலர் தெய்வாதீனமாக தப்பியதாக தெரிய வருகிறது.

அரியாலை மாம்பழம் சந்தியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த வீட்டு மதிலுடன் மோதி கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழிலுள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து சென்ற வைத்தியர்களின் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.

கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது கார் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், சிறு காயங்களுடன் வைத்தியர்கள் தப்பியுள்ளனர்.

காயமடைந்து மயக்கமடைந்த நிலையில் இருந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *