குடியரசு தினம் : தமிழகத்தில் தேசிய கொடி ஏற்றினார் ஆளுநர்!

தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்படி ஆளுநர் ஆ.என்,ரவி முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து முப்படையினர், கடலோர காவல்படை, முன்னாள் இராணுவத்தினர், துணை இராணுவப் படை, தமிழ்நாடு பேரிடர் நிவாரணப் படை, காவல், சிறை, தீயணைப்பு, வனத்துறை, ஊர்க்காவல் படையினர், தேசிய மாணவர் படை, கடல்சார் கழகம் உள்ளிட்ட பல்வேறு படைப்பிரிவின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றார்.

தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறப்பாக செயற்பட்டவர்களுக்கு அண்ணா பதக்கம், உத்தமர் காந்தியடிகள் காவலர் பதக்கம், திருந்திய நெல் சாகுபடிக்கான வேளாண்மைத்துறை சிறப்பு விருது, மதநல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது ஆகியவற்றை முதலமைச்சர் வழங்கி வைத்தார்.

பின்னர் தமிழகத்தின் பல்வேறு துறைகளின் அலக்கார ஊர்திகள் நடைபெற்றதுடன், கொரோனா தொற்று பரவல் காரணமாக 30 நிமிடங்களில் குறித்த விழா நிறைவுபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *