உலகின் சக்திவாய்ந்த கப்பற்படை கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது – ராம்நாத் கோவிந்த்

நவீன இராணுவ திறன்கள் மூலம் உலகின் சக்திவாய்ந்த கப்பற்படை கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளதாக குடியரசு தலைவர் ராம்நாந் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், நாடு கொரோனா தொற்றுக்கு எதிராக தீவிரமாக போராடி வரும் இக்கட்டான தருணங்களில் மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்ய வேண்டும் எனக் கூறினார்.

பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பிற நாடுகளுக்கு இந்தியா உதவி செய்ய தவறவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம் உலகில் புதுமையான பொருளாதாரத்தைக் கொண்ட 50 நாடுகளில் இந்தியாவும் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

நவீன இராணுவ திறன்கள் மூலம் உலகின் சக்திவாய்ந்த கப்பற்படை கொண்ட நாடாக இந்தியாவும் மாறியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *